அல்லேலூயா! இப்போது போர்

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!