ஆ இயேசுவே, உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்;
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான
அமிர்தம் தந்தீரே;
உம் ஆசீர்வாதம் ஈந்து,
என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து,
தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்,
என் நெஞ்சில் தங்கிடும்;
நான் உம்மைப் பற்றிக் கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்,
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்,
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.