அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
இப்பாரில் யுத்தம் மூண்டதே;
விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்;
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
வீண் ஆகாதே யார் வேண்டலும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.