அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக
பெய்ய, அடியேனையும்
கர்த்தரே, நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்;
என்னையும், என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2. என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்;
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்;
என்னையும், என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்.

3. இயேசுவே, நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்;
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்;
என்னையும், என்னையும்
சுத்தமாக்கியருளும்.

4. தூய ஆவீ, கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்;
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்;
என்னையும், என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்.

5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
மீட்பர் தூய ரத்தமும்,
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
என்னிலும், என்னிலும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.