பாதை காட்டும் மா யெகோவா

1. பாதை காட்டும், மாயெகோவா
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்