நீர் வல்லவர் ! மா வல்லவர் !

1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை
உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்;
விண்மீன்களும் பேரிடி முழக்கமும்
உம் வல்லமை எடுத்துரைக்குதே.

என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே!
நீர் வல்லவர் ! மா வல்லவர் !
போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா !
நீர் வல்லவர் ! மா வல்லவர் !

2. காடுகளின் பசும் மரங்கள் மீது
கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்;
உயர் மலை உன்னத காட்சி கண்டேன்,
தென்றல் காற்றும் தெளிநீரோடையும் --- என்

3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும்
மரிக்கவே அனுப்பி வைத்தாரே;
சிலுவையில் என் பாவ பாரமேற்று
ரத்தம் சிந்தி பாவ பலியானார் --- என்

4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு
என்னைச் சேர்க்க இயேசு வருவாரே
உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும்
வல்லவரை வணங்கித் தொழுவேன் --- என்