பூலோகத்தாரே யாவரும்

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.