என் தேவனே என் ராஜனே
நான் உம்மை உணர்ந்திங்கு கவியாகிறேன்
நான் கலங்கும் போதும் நான் மகிழும் போதும்
என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே

பாவங்கள் எனை சேர்ந்த போதும்
சாபங்கள் பல நேர்ந்த போதும்
தடுமாறும் அந்நேரத்தில்
நீர் என்னை காத்தீரையா
இந்த நிலை என்றும்
என் வாழ்வில் நிலைத்திருக்க
நான் உமை என் மனதாலே எந்நாளும் துதித்தேனே

கல்வாரி பாடுகளை
எனக்காக நீர் ஏற்றீரே
உயிர்த்தெழுந்தீர் என் நேசரே
என்றென்றும் காத்திடவே
என்றும் உமை துதிக்க
நீர் என்னை மாற்றினீரே
என் பாதம் இடறாமல் எந்நாளும் நடத்தினீரே