உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - (2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் - (2)

1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் - (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் - (2) --- உன் காரியம்

2) உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் - (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - (2) --- உன் காரியம்

3) உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் - (2) --- என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் --- (2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் --- (3)