1. என் ஆண்டவா மாலை நேரம்
அடிவானம் தோன்றும் காட்சி
என் ஆண்டவா தூதன் தானோ
ஓவியமோ செய்கின்றானோ

என் ஆண்டவா சொல்லித் தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித் தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை

2. செங்கதிர்கள் சிறகில்பட
கூடு நோக்கும் பறவைகளும்
தம் முகங்கள் தரையில் விழ
வீடு நோக்கும் மந்தைகளும்

என் ஆண்டவா சொல்லித் தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித் தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை

3. என் ஆண்டவா மாலை நேர
அமைதியினை கிழிக்கும் நாதம்
குயிலும் மயிலும் குருவிகளும்
அன்பால் தம்மை துதிக்கும் கீதம்

என் ஆண்டவா சொல்லித் தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித் தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை