நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே