கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

பல்லவி

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்

1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் , வல்லமை , மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா , குமாரன் பரிசுத்தாவியின்
புதிய ஆசீர்வாதம் பெருக --- கர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கின்றார் --- கர்த்தரின்

3. அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் --- கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் --- கர்த்தரின்