போற்றித் துதிப்போம்

1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புனித இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்

பல்லவி

இயேசு என்னும் நாமமே - என்
ஆத்துமாவின் கீதமே - என் நேசரேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் --- இயேசு

3. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெயதொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் --- இயேசு

4. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் --- இயேசு

5. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
தந்து தொண்டு செய்குவேன் --- இயேசு