நன்றியால் துதி பாடு, நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு - (2)
நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மை உள்ளவர் - (2)
நன்றியால் துதி பாடு நம் இயேசுவையே நாவாலே என்றும் பாடு - (2)

எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் - (2)
ஆவியும் நீரே, அந்தமும் நீரே, ஜோதியும் நீரே, என் சொந்தமும் நீரே - (2)

எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் - (2)

என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே

என் உள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன்
எவரும் அறியாரே, என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலுயா, இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே

வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தால்
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - (2)

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா - (2)

மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் - (2)
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்கதரிசனம் சொல்வாரே - (2)

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - (2)

பெந்தெகோஸ்தே நாளை போல பெரிதான முழக்கத்தோடு - (2)
வல்லமையாய் இறங்கி வரங்களினாலே நிரப்பும் - (2)

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - (4)

ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி உயிர்ப்பிக்க வேண்டும், எங்கள் தேவா
முன்மாரியாக அன்று, பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று, பொழிந்திடுமே - (2 )