காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே

இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்

1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் --- காவியம்

2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன் --- காவியம்