இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதினில் அமைதி வந்தேறும்

1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை
பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை
மறந்துவிடாமல் அவைகளுக் உணவு
வாரி வழங்கி பேணியே காக்கும் --- இறைவன்

2. வயல்வெளி மலர்களை பாரீர் அவைகள்
வருந்தி உழைப்பதும் நூற்பதும் இல்லை
மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன்
மன்னனும் என்றும் உடுத்தியதில்லை --- இறைவன்

3. எதனை உண்போம் எதனை உடுப்போம்
எதனை குடிப்போம் என திகைக்காதே
முதலில் பரமனின் அரசின் நீதியை
முனைந்து தேடிடும் சித்திக்கும் அனைத்தும் --- இறைவன்