உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
பலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் கூரும் தேவ பாலா

1. வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா

2. கரைகாணா துன்ப வெள்ளம்
புரண்டோடும் வேளை வந்தீர்
திருக் கைகள் மீட்டி என்னை
உம் அருகில் அணைத்து கொண்டீர்
உம் அருகில் அணைத்து கொண்டீர்