யாக்கோபை போல நான் போராடுவேன்
எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

1. அன்னாளை போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும் ஐயா

3. தாவீதை போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்