1. உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமையிழந்ததே
பாரில் மகிமையிழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் - தேவ
பரனை போற்றிடுவேன் --- உந்தன்

3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா - அவர்
சிலுவை அண்டை நீ வா --- உந்தன்

4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் - தினம்
போற்றித் துதித்திடுவோம் --- உந்தன்