1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே

2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் - நல்ல
புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்

3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்

4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் - அஞ்ச
மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்

5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் - என்னைத்
தேற்றும் உமது தடியும் கோலும்

6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி - நீர்
தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி

7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி - அபி
ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி

8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் - கிருபை
சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்

9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் - மேவி
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்