காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
பாலன் பிறந்தார் அன்று
பாசத் திருநாள் இன்று

தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
பாசத் திருநாள் இன்று

1. பூக்களின் எழில் புன்னகை தனில்
இறைமகன் பாசம் காணலாம்
நீரலை எழும் நீர்களின் தனில்
இறைமகன் நேசம் காணலாம்

பகலிலே வேகமாய்
இரவிலே தீபமாய்
காற்றும் இறை நாமமே
கலங்காதே நாம் வாழலாம் --- காலம்

2. காவியம் புகழ் பரமனின் அருள்
மழைத் தரும் மேகம் ஆகுமே
பாலகன் பதம் பணிந்திடும் மனம்
ஒளி விடும் தீபம் ஆகுமே

அமைதியை செல்வமாய்
அருளையே அமுதமாய்
தாரும் இறை இயேசுவே
எம் வாழ்வு ஒளி வீசுமே --- காலம்