சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்

1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார் - உன்னை
அணைக்கத் துடிக்கின்றார்

2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்

3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்