இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

பல்லவி

இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,
ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்