சுய அதிகாரா சுந்தரக் குமாரா

பல்லவி

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய

சரணங்கள்

1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய