கிருபை புரிந்தெனை ஆள்

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை