விந்தை கிறிஸ்தேசு ராசா!


பல்லவி

விந்தை கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை

அனுபல்லவி

சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் --- விந்தை

சரணங்கள்

1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி ,
செல்வாக்குகள் மிக விருந்தாலும் ,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே --- விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்;
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன் --- விந்தை

3. சென்னி , விலா , கை கானின்று
சிந்துததோ! துயரோடன்பு;
மன்னா , இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் --- விந்தை

4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் --- விந்தை