முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன்
அதிசயமானவரே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே --- முழு
2. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை
ஒரு போதும் கைவிடுவதே இல்லை --- முழு
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்
எதிரியின் கை ஓங்க விடாதேயும் --- முழு