உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தைபோல காக்கின்றீரே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை அதிகாலையில் உம்மை தேடவேண்டுமே அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மை கண்டு சேர வேண்டுமே