இயேசு கதவை திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை
திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார்
1. சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவா
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்
அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார் --- இயேசு
2. வெண்கல கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோ மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் --- இயேசு
3. இயேசு ஒரு வார்த்தை சொன்னால்
யாராலும் எதிர்க்க முடியவில்லை
இயேசு விடுதலை தந்தால்
யாராலும் தடுக்க முடியவில்லை --- திறந்திடுவார்