கர்த்தரே என் அடைக்கலம்
எதர்க்கும் கலங்கிடேன்
அவரே என் துணையாய் இருப்பதால்
எதர்க்கும் அஞ்சிடேன்

பயமில்லை பயமில்லை
என் இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை
என் இயேசு என்னோடு வருவதால்

1. நீதிமான் கால்களை தள்ளாடிட
ஒருபோதும் விடமாட்டார்
மான்களின் கால்கள் போல் திடப்படுத்தி
பெலன் கொள்ள உதவி செய்வார்
என்னை ஏந்திடுவார், சுமந்திடுவார்
தப்புவித்து நடத்துவார் --- கர்த்தரே

2. பூமியின் நிலைகள் மாறினாலும்
அவர் ஒருபோதும் மாறிடார்
பர்வதங்கள் நிலை பெயர்ந்து போனாலும்
அவர் என்னை விட்டு விலகிடார்
என்னை காத்திடுவார், கரம் பிடிப்பார்
கடைசி வரை நடத்துவார் --- கர்த்தரே