கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானித்தால்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
குடும்பமாக பணிகிறோம்
1. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே
2. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்தீர் உம் தழும்புகளால்
திருரத்தத்தால் என்னை காத்தவரே
3. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால்