1. அருணோதயம் எழுந்திடுவோம்
பரண் இயேசுவைத் துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்
2. இதைப் போன்றொரு அருணோதயம்
எம்மைச் சந்திக்கும் மனமே
ஆ என்னானந்தம் ஜோதி சூரியனாம்
எந்தன் நேசரெழும்பும் நாள்
3. நன்றியால் உ ள்ளம் பூரித்திடுதே
அன்னையாமேசு காருண்யம்
ஒவ்வொன்றாய் இதைத் தியானம் செய்யவும்
எவ்வாருமேற்ற சந்தர்ப்பம்
4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்
புவி விட்டுமே போய் விட்டார்
என்றாலும் நமக்கிந்த நாளையும்
தந்த நேசரைத் துதிப்போம்
4. நான் நிர்வாணியாய் வந்த வண்ணமே
நிர்வாணியாக போகின்றேன்
கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ
நாடிப் போமந்த நாட்டிற்கே
5. ஆ என் நேசரின் அன்பையெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆ என் நேசரோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்
6. பார் தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாரிவள் கானகந்தன்னில்
எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்
7. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்
ஆசையோடு நான் வாரேன் என் துக்கம்
பாசமாய் அங்கு தீர்த்திடும்