எந்தன் முன்னே செல்லும் தெய்வம் நீர்
முன்னறிந்து என்னை அழைத்தீர்
போகும் வழி இது , இதில் சென்றால் நன்மை
தினம் சொல்லும் தெய்வம் நீர்
மனம் கொண்டாடும் தேவன் நீர்
1. நிலையான வாழ்வும் நிலை மாறி போனால்
வசனத்தினால் வரும் பெலன் சுகம்
வீடு வரைக்கும் உறவு நிலைக்கும்
முடிவு வரைக்கும் வசனம் இருக்கும்
பரிவோடு என்னை காப்பீரே
பரத்தோடு என்னை சேர்ப்பீரே
2. கதைப் போல வாழ்க்கை கடந்தோடிப் போகும்
உம் வார்த்தையோ நிலை பெரும் - தினம்
பிறக்கும் பொழுது தயவும் பிறக்கும்
வளரும் பொழுது கிருபை இரக்கம்
வரம் தந்து என்னைக் காத்தீரே
விலகாத தேவன் நீர் தானே
3. தினம் உம்மைப் பாடும் இதயத்தைத் தாரும்
துதி செய்வதே உள்ளம் இன்பம் கொள்ளும்
முதிர்ந்த வயதில் தள்ளி விடாமல்
உதிரும் பொழுது விலக்கி விடாமல்
அன்போடு என்னைச் சேர்ப்பீரே
அரணாக வாரும் ஏசுவே