தேவன் எந்தன் மறைவிடம் என் கேடகமும் நீரே

தேவன் எந்தன் மறைவிடம் என் கேடகமும் நீரே
காத்திருப்பேன் உம் வசனத்திற்காய்
நான் பாடும் கீதம் நீரே
கிருபையாய் என்னை நடத்திடும் பிரமாணங்களைப் போதியும்

1. ஆயிரம் பேரில் சிறந்தவரே - உம்
நாமத்தை நேசிக்கிறேன்
நேசத்தின் கொடியை எந்தன் மீது
வீசிட செய்திடுமே
ஆவியினாலே அபிஷேகம் செய்து
தினமும் நிரப்பிடுமே
உணர்வுள்ள இதயம் தினமும் வேண்டும்
உம்மை அறிந்திடவே

2. நியாயமும் நீதியும் செய்திடும் மனதைத்
தினமும் தந்தருளும்
நன்மையையும் கிருபையும் என்னைத் தொடர
துணையாய் வந்தருளும்
ஞானம் தந்திடும் உந்தன் வசனம்
பாதையில் நல் வெளிச்சம்
சிறியவன் என்னை உயர்த்தி மேன்மை
வாழ்வைத் தந்தருளும்

3. எந்தன் இதயம் உம்மை நோக்கி
என்றும் கூப்பிடுமே
குரலைக் கேட்டு உதவிடும் தெய்வம்
எந்தன் சொந்தமதே
பகலில் வெயிலும் இரவில் நிலவும்
சேதப்படுத்தாதே
போக்கையும் வரத்தையும் இது முதற் கொண்டு
என்றும் காப்பாரே