விலகா கிருபை

என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை

1. உன்னதரின் மறைவில் வல்லவரின் நிழலில்
நிலைத்து நிற்கும் கொடி நான் கனி கொடுப்பேன் நிதம் நான்
என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
என் ஜீவன் உள்ள நாளெல்லாம்

என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை

2. குயவனே களிமண் நான் விருப்பம்போல் வனைந்திடுமே
கரங்களில் பாத்திரமாய் பயன்படுத்தும் உமக்காய்
உருவாக்கினீர் உருமாற்றினீர்
உமதாக்கி சேர்த்துக்கொண்டீர்

என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபை
விட்டு விலகாமல் காப்பதும் கிருபை

3. இதயமெல்லாம் நன்றியால் நிரம்பிடுதே நன்மையால்
பாடிடுவேன் கவியால் போற்றிடுவேன் துதியால்
மேகம் மீதினில் வேகமாய் வரும்
என் மீட்பர் உம்மை சேருவேன்

என்னை சூழ்ந்து நிற்பதும் கிருபை
விட்டு விலகாமல் சுமப்பதும் கிருபை
பெலவீனத்திலும் மன சோர்வினிலும்
மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபை
பெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்
விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை