இயேசு நல்லவர் அவர் வல்லவர்

இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது
பெருவெள்ளத்தின் இரைச்சல் போல
துதித்திடுவோம் அவர் நாமத்தை

அல்லேலூயா (4)

மகத்துவம் ஞானமும் ஸ்தோத்திரம் கனமும்
வல்லமை பெலனும் என் இயேசுவிற்கே

1. கர்த்தருக்காய் நான் காத்திருந்தேன்
அவர் என்னிடமாய் சாய்ந்து கேட்டார்
பாதாளமான குழியினின்றும்
உளையான சேற்றினின்றும்
அல்லேலூயா (4) --- மகத்துவம்

2. எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவே
நீர் அல்லால் எனக்கொரு நன்மையும் இல்லை
பூமியில் உள்ள பரிசுத்தரோ
அவர் எனக்கு சகோதரர்கள்
அல்லேலூயா (4) --- மகத்துவம்