நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே! (4)
1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை --- ஆராதனை
2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே --- ஆராதனை