1. நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

2. நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே

3. நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே

4. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை